ரயில்வே சுரங்கப்பாதை மழைநீரில் மூழ்கி சமையல் தொழிலாளி பலி

x

திருப்பத்தூர் அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி சமையல் தொழிலாளி பலியானார். வாணியம்பாடி அருகே கடந்த 4 ஆண்டுகளாக ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக பெய்த கனமழை காரணமாக சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியிருந்தது. இதில் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் தீயணைப்பு துறையினர் வந்து பார்த்த போது சமையல் தொழிலாளியான பயாஸ் அகமது என்பவர் சடலமாக கிடந்தது தெரியவந்தது. சடலத்தை மீட்டதோடு அவரின் மரணத்திற்கு காரணம் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்