மணிப்பூரில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல்.. விமான நிலையத்தில் எடுத்த அதிரடி முடிவு - "அடுத்து நடந்ததுதான் ஹைலைட்!"

x

சுராசந்த்ப்பூர் பகுதியில் மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ராகுல் காந்தி கலந்துரையாடினார்

மணிப்பூரில் சுராசந்த்ப்பூர் பகுதியில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை சந்திப்பதற்காக சென்ற ராகுல் காந்தியை பிஷ்ணுப்பூர் பகுதியில் பாதுகாப்பு காரணங்களை காட்டி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து இம்பால் விமான நிலையத்திற்கு திரும்பி சென்ற ராகுல் காந்தி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக சுராசந்த்ப்பூர் பகுதிக்கு சென்று அங்குள்ள நிவாரண முகாம்களில் கலவரத்தால் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து கலந்துரையாடியதோடு அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள உணவு கூடத்தில் குழந்தைகளுடன் ஒன்றாக அமர்ந்து ராகுல் காந்தி உணவருந்தினார். மொய்ராங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமிலும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ராகுல் காந்தி உரையாடுவதாக இருந்த நிலையில் மொய்ராங்கிற்கு செல்லும் ராகுல் காந்தியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்