2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து நாளை ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு | Rahul Gandhi | Court

x

கோலாரில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ புர்னேஷ் மோதி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சூரத் மாவட்ட நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. வழக்கில் மேல்முறையீடு செய்வதற்காக, தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கப்பட்டது.

அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த தீர்ப்புக்கும், தண்டனைக்கும் இடைக்கால தடை கோரி சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி சார்பில் நாளை முறையீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக அவர் சூரத் செல்லக்கூடும் என்றும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்