துலிப் கோப்பையில் அதிரடியால் மிரட்டிய ரஹானே ..! - ஒரே இன்னிங்சில் டபுள் செஞ்சுரி விளாசல்...

x

துலீப் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் ரஹானே இரட்டை சதம் அடித்து அசத்தி உள்ளார்.

துலீப் டிராபி தொடரின் காலிறுதிப் போட்டியில் வெஸ்ட் சோன் அணியும், நார்த் ஈஸ்ட் சோன் அணியும் ஆடி வருகின்றனர்.

இதில் வெஸ்ட் சோன் அணியின் கேப்டனாக உள்ள ரஹானே, தங்கள் அணியின் முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்தார்.

207 ரன்கள் அவர் குவித்த நிலையில், வெஸ்ட் சோன் அணி முதல் இன்னிங்சில் 590 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

தற்போது நார்த் ஈஸ்ட் சோன் அணி 2வது இன்னிங்ஸை ஆடி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்