குற்றாலம் அருவிகளில் சீறிப்பாயும் தண்ணீர் - பெண்கள், குழந்தைகள் குளிக்கத் தடை

x

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் காலம் தொடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதோடு மெயின் அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேற்று சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்று வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால் ஆண்கள் மட்டும் ஓரமாக நின்று குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மற்ற அருவிகளில் குளிக்க எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை.

https://youtu.be/6l0qSaXMiYY


Next Story

மேலும் செய்திகள்