தமிழக கூட்டுறவு சார்பில் பட்டாசு விற்பனை - பொதுமக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ராதாகிருஷ்ணன்

x

தமிழக கூட்டுறவு சார்பில் பட்டாசு விற்பனை - பொதுமக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ராதாகிருஷ்ணன்

தமிழக அரசின் கூட்டுறவு துறைக்கு சொந்தமான டியூசிஎஸில் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு விற்பனை துவங்கியுள்ளது. சென்னை தேனாம்பேட்டை உள்ளிட்ட 8 இடங்களில் பட்டாசு விற்பனை நடைபெற்று வருகிறது. இதுவரை ஒரு கோடி ரூபாய்க்கு மேற்பட்ட பட்டாசுகள் விற்பனை ஆகி உள்ளது. பட்டாசு விற்பனை செய்யக்கூடிய இடங்களில் கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.


Next Story

மேலும் செய்திகள்