நீதிமன்ற அறைக்குள் தலைவார கூடாது என அறிவிப்பு... அறிக்கையை விமர்சித்த பெண் வழக்கறிஞர்கள்

x

புனே நீதிமன்ற அறைக்குள் பெண் வழக்கறிஞர்கள் தலை வார கூடாது என்ற உத்தரவு சர்ச்சையான நிலையில், அது திரும்பபெறப்பட்டது. புனே மாவட்ட நீதிமன்றத்திற்குள் பெண் வழக்கறிஞர்கள் தலை வாருவதால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் நீதிமன்ற அறைக்குள் பெண் வழக்கறிஞர்கள் தலை வாருவதை தவிர்க்குமாறு நீதிமன்ற பதிவாளர் கையெழுத்திட்ட அறிக்கை சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. அந்த அறிக்கையை மூத்த பெண் வழக்கறிஞர்கள் விமர்சித்திருந்தனர். இந்த நிலையில் சர்ச்சைக்குரிய நீதிமன்றத்தின் அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்