சிங்கிளாக ஹாங்காங் சென்று ஜோடியாக வந்த புதுக்கோட்டை பையன்! கடல் தாண்டி...மலை தாண்டி.. மலர்ந்த காதல்!

x

புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஹாங்காங்கைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், போருவாய் கிராமத்தைச் சேர்ந்த காத்தமுத்து, பொறியியல் படிப்பை முடித்து விட்டு, பணி நிமித்தமாக ஹாங்காங் சென்றுள்ளார். தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வரும் காத்தமுத்துவுக்கும், ஹாங்காங்கைச் சேர்ந்த செல்சி என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்து, இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அவர்களின் திருமணத்துக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, இரு குடும்பத்தினரின் முன்னிலையில், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் காத்தமுத்து- செல்சி திருமணம், இந்து முறைப்படி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. புதுமணத் தம்பதியரின் திருமணத்தை நண்பர்களும் உறவினர்களும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்