ஜாதகத்தால் திருமணத்தை மறுத்த பெற்றோர்.. அதையும் மீறி காதலனை கரம் பிடித்த காதலி - காவல்நிலையத்தில் தஞ்சம்

x

புதுக்கோட்டை மாவட்டத்தில் காதலர்கள் திருமணம் செய்து கொண்ட கையோடு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொல்லங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் வினோத்.

இவரும் பந்துவாகோட்டை கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவியும் காதலித்து வந்த நிலையில், இருவரின் ஜாதகமும் ஒத்துப்போகவில்லை என கூறி பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுத்தாக கூறப்படுகிறது.

இதனால், வீட்டினை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட காதலர்கள், பாதுகாப்பு கோரி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இதையடுத்து, இருவரும் திருமண வயதை எட்டியுள்ளதாகவும், முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் கூறி பெண்ணை காதலனுடன் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்