"சரியான பதில் வந்தால் மட்டுமே நிதி கிடைக்கும்" - அமைச்சர் பிடிஆர் அதிரடி

x

நிதி தொடர்பான கோரிக்கைகள் வந்தால், பல வகையான கேள்விகளை கேட்போம் என்றும், அவற்றுக்கு சரியான பதில்கள் வந்தால் மட்டுமே நிதி கிடைக்கும் என்றும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய துணைவேந்தர் கௌரி, நிதி நெருக்கடியில் இருந்து பல்கலைக்கழகம் மீள்வதற்கு அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதி தொடர்பான கோரிக்கைகளுக்கு சரியான விளக்கங்கள் இருந்தால் மட்டுமே நிதி கிடைக்கும் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்