பட்டமளிப்பு விழாவிற்கு வந்த ஆளுநருக்கு எதிர்ப்பு

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டிய கொளத்தூர் மணி உள்ளிட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர். பெரியார் பல்கலைக்கழகத்தின் 21 வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சேலம் வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஏராளமானோர் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு முழக்கமிட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்