இந்தி திணிப்புக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் - கொல்கத்தாவில் அண்ணா, கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் போட்டோஸ்

x

கொல்கத்தாவில் இந்தி திணிப்புக்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அண்ணா, கருணாநிதி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படங்கள் இடம்பெற்றன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகள் குழு, மத்திய கல்வி நிலையங்களில் இந்தியை கட்டாயமாக்குவது குறித்து பரிந்துரைத்தன.

இந்தி மொழியை கட்டாயமாக்குவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக நடைபெற்ற கண்டன பேரணியில், இந்தியை பேசாத பல்வேறு மொழி பேரும் மக்கள் பங்கேற்றனர். அப்பொழுது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களின் கைகளில் அண்ணா, கருணாநிதி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உருவப்படங்கள் தாங்கிய பதாகைகள் இடம்பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தன.


Next Story

மேலும் செய்திகள்