பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி... திமுக, பாஜகவினர் மாறிமாறி கோஷம்

x

சென்னை பல்லாவரத்தில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திமுக - பாஜகவினர் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டம் தொடங்கியது முதல், மோடி, பாரத் மாதாகி ஜே என்று பாஜகவினர் கோஷமிட்டனர். அவர்களுக்கு போட்டியாக, ஸ்டாலின் வாழ்க உதயநிதி வாழ்க என்று திமுகவினரும் கோஷம் எழுப்பினர். அப்போது, இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், மோதல் ஏற்படும் சூழல் காணப்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்த இருகட்சித் தலைவர்கள், தொண்டர்களை தனித்தனியே அமர வைத்தனர். பிரதமர், முதலமைச்சர் வருகைக்கு முன்பு இருகட்சியினரும் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்