13வது மாடியிலிருந்து கீழே விழுந்த பேராசிரியை - தற்கொலையா? கொலையா? என போலீசார் விசாரணை

x

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், பிரேம்குமார் - சவுமியா தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், சவுமியா தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இதனிடையே, தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியிலிருந்து, சவுமியா கீழே விழுந்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சவுமியா தவறி கீழே விழுந்து உயிரிழந்தாரா? தற்கொலையா? அல்லது திட்டமிட்ட கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்