ஜாமினில் வெளிவந்த கைதிகள்.. 'விக்ரம்' பட பாணியில் நடந்த கஞ்சா சப்ளை.. சிக்குவாரா ரோலெக்ஸ்..?

x

திருவாரூரில், கஞ்சா விற்பனை செய்து கூலிப்படையினருக்கு பணம் அனுப்பி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்த கூலிப்படையை சேர்ந்த 4 பேரை, போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், இவர்களுடன் பவித்ரமாணிக்கம் பகுதியை சேர்ந்த பாலா என்பவர் நெருக்கமாக பழகி வந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் பாலாவின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது, ஒன்றரை லட்சம் ரூபாய் பணம், 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா சப்ளை செய்து வந்த அரசவனங்காடு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை கைது செய்த போலீசார், அந்த நபரிடம் இருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் கார் ஒன்றை பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்பனையில் கிடைக்கும் பணத்தை, ஒரு பகுதியை இந்த இருவரும் கூலிப்படையினருக்கு அனுப்பி வந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்