போலீசுக்கு டிமிக்கி கொடுத்து தப்பி ஓடிய பாலியல் வழக்கு கைதி..!

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில், கடந்த வருடம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜா, மருத்துவமனை வளாகத்திலிருந்து தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு கைதியை தேடி வரும் போலீசார், தகவல் கிடைத்தால் வேலூர் மாவட்ட காவல் கட்டுபாட்டுக்கு தெரிவிக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.-


Next Story

மேலும் செய்திகள்