பத்திரிகையாளர் கேமராவை பார்த்ததும் குழந்தையாக மாறிய கைதி - குலுங்கி குலுங்கி சிரித்த போலீஸ்

x

புதுச்சேரி, காரைக்கால் அடுத்த வேலவாஞ்சூரில் இயங்கி வரும் தனியார் துறைமுகத்தில் 100கிலோ இரும்பை நான்கு பேர் திருட முயற்சித்துள்ளனர். இதை ரோந்துபணியில் ஈடுபட்ட காவலாளி, கையும் களவுமாக பிடித்த நிலையில், போலீசில் ஒப்படைத்தார். இதில், நாகூர் பகுதியை சேர்ந்த முத்துவேல், ராஜி, முருகன் மற்றும் வடிவேல் ஆகியோர் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொள்ள நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து நான்கு பேரையும் போலீசார் சிறைக்கு அழைத்து சென்ற போது, கைதி ஒருவர் பத்திரிகையாளர்களிடம் செல்பி எடுப்பது போல் போஸ் கொடுத்தும், டாட்டா காட்டியும் சென்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்