பாதுகாப்புக்கு நின்ற போலீசார் - கண்ணில் மண்ணை தூவி ஜூட் விட்ட பலே கைதி | thanthitv

x

பரமக்குடி அருகே பாண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் அஜித் குமார். இவரை கடந்த 5 ஆம் தேதி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி போலீசார் கைது செய்தனர். அப்போது ஏற்பட்ட காயத்தால் அஜித்குமார் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவலர்கள் கண்காணித்து வந்த நிலையில், தீடிரென தப்பி ஓடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவலர்கள் அஜித் குமாரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்