சிறைக்குள் அரங்கேறிய வன்முறை...14 பேர் கொல்லப்பட்ட அதிர்ச்சி - மெக்சிகோவில் பயங்கரம்

x

ஜுரேஸ் நகரில் அமைந்துள்ள சிறைச்சாலையில் நடந்த பயங்கர தாக்குதலில் 10 பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் 4 கைதிகள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தக் கலவரத்திற்கு மத்தியில் 24 கைதிகள் தப்பியோடியதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலை நடத்தியது யார் என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

தாக்குதல் நடத்தியவர்கள் கருப்பு உடை அணிந்திருந்ததாகவும், காவலர்களை விட பலம் வாய்ந்த ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் கைதி ஒருவரின் உறவினர் தெரிவித்தார்.

தாக்குதல் நடத்தியவர்கள் கவச வாகனங்களில் சிறைச்சாலைக்குள் நுழைந்து இந்த வன்முறையை நிகழ்த்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கைதிகளா அல்லது வன்முறையை நிகழ்த்தியவர்களா என்பது தெரிவிக்கப்படவில்லை.

ஜுரேஸ் நகரம் அமெரிக்காவின் எல்லையில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோவின் அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்