நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி - 3000 போலீசார்கள் குவிப்பு... பரபரப்பான மதுரை ஏர்போர்ட்

x

திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நாளை பங்கேற்கிறார். விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக வெள்ளிக்கிழமை மதுரை விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வருகிறார். இதையொட்டி விமான நிலையத்தை சுற்றி 4 காவல் ஆணையர் தலைமையில் மூவாயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் உள்ளனர். விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் கேமரா பறக்க தடை விதிக்கப்படுகிறது. நாளை விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் சற்று முன்னரே விமான நிலையத்திற்கு வருகை தர வேண்டும் என்று காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்