மணிப்பூர் கலவரத்தில் சிக்கிய கர்ப்பிணி - நிவாரண முகாமில் பிரசவம்

x

மணிப்பூர் கலவரத்தில் மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு நிவாரண முகாமில் குழந்தை பிறந்துள்ளது. மணிப்பூரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்த நிலையில், பாதுகாப்பாக மீட்கப்பட்ட மக்கள் மந்திரிபுக்ரி நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கலவரத்தின்போது மீட்கப்பட்ட எஸ்தர் ஹோண்டா என்ற கர்ப்பிணிக்கு நிவாரண முகாமில் குழந்தை பிறந்தது. இதனிடையே தாயும், சேயும் நலமாக இருப்பதாக, பிரசவம் பார்த்த அசாம் எல்லை பாதுகாப்புப்படை மருத்துவர்கள் குழு தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்