கார் தீப்பிடித்த விபத்தில் கர்ப்பிணியும், கணவரும் உயிரிழப்பு...கேரளாவில் சோக சம்பவம்

x

கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ரீஷா என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது கணவர் பிரஜித், முதல் குழந்தை உட்பட 6 பேர் காரில் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது கார் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், பின்புறத்தில் அமர்ந்திருந்த குழந்தை, பெண்கள் உட்பட 4 பேர் பத்திரமாக கீழே இறங்கினர். ஆனால் காரின் முன்பக்க கதவை திறக்க முடியாததால், பிரஜித் மற்றும் ரீஷா இருவரும் உடல்கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கார் கேமரா மின்கம்பியில் மின்கசிவு ஏற்பட்டிருக்கலாம் எனவும், சீட் பெல்ட் அணிந்திருந்ததால் தம்பதிகளால் எளிதில் வெளியேற முடியவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்