அரசு மருத்துவமனையில் அலைக்கழிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் - "ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை "

x

உமரி காடு பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் துர்கா என்பவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் ஊழியர்கள் அழைக்கழித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த பெண், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதனிடையே, உரிய சிகிச்சை அளிக்கால் கால விரயம் காட்டும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் பொன் இசக்கி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்