சார்பு ஆய்வாளர் பணியிட மாற்றத்தை எதிர்த்து சுவரொட்டி

x

ர ாமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில், சார்பு ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். திருப்புல்லாணி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் பட்டு ராஜா என்பவர், கல்வி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும், சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தும் நற்பெயர் பெற்றதாக தெரிகிறது. அவர் பணியிட மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். அதில், ஒற்றுமையும், சமத்துவத்தையும் ஏற்படுத்தி வரும் பட்டு ராஜாவை பணியிட மாற்றம் செய்வதை கண்டிக்கிறோம் என, குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்