இதய பாதிப்பால் அவதிப்படும் ஏழை சிறுவன்... "எங்கள் மகனின் உயிரை காக்க வேண்டும்" - பெற்றோர் வைக்கும் கண்ணீர் கோரிக்கை

x

தென்காசி அருகே இதய அறுவை சிகிச்சைக்காக போராடும் 14 வயது சிறுவன், அறுவை சிகிச்சைக்கு முதலமைச்சர் உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கடையம் அருகே சம்பன்குளத்தை சேர்ந்த முருகனின் மகனான சரவணனிற்கு சிறு வயதில் இருந்து இதய பாதிப்பு இருந்து வந்துள்ளது. 2010ம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்திருந்தாலும், சிறுவனுக்கு மாற்று இதயம் பொறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாற்று இதயம் பொறுத்த 15 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளதால், பிறரின் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பதாக முருகன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். கூலி வேலை செய்யும் தான், சிறுவனின் மருத்துவ செலவுக்காக மாதம் 8 ஆயிரம் ரூபாய் செலவிடுவதாக கூறும் முருகன், தனது மகனின் உயிரை காக்க முதலமைச்சர் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதய பாதிப்பால் சரவணன் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி இருப்பதாகவும் சிறுவனின் பெற்றோர் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்