பேனா வாங்குவதில் நண்பனுடன் சண்டை.. அரசு பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன் பலி - பார்த்து கதறிய தாய்.. சென்னை அருகே அதிர்ச்சி
- பொன்னேரியை அடுத்த ஆரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் இரு மாணவர்களுக்கிடையே பேனா வாங்குவதில் சண்டை ஏற்பட்டுள்ளது.
- அதில், ஆரணியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற மாணவன் காயமடைந்தார்.
- அவரை ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
- ஆனால், வரும் ஏற்கனவே மாணவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
- தகவலறிந்து சென்ற உறவினர்கள், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து, உடல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- பள்ளிக்கூடத்தில் மாணவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
Next Story