பொங்கல் பரிசு தொகுப்பு.. இன்று முதல் வீடு தேடி வரும் டோக்கன்..

x

பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இதனையொட்டி அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் ஆகியவை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, வருகிற 9-ந் தேதி பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இதனிடையே, பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் வீடுகளுக்கு சென்று வழங்க உள்ளனர். நாளொன்றுக்கு 200 டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு, வருகிற 8-ந்தேதி வரை டோக்கன் வழங்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்