மதுபான கடையின் நிர்வாக அலுவலகத்தை உடைத்து கொள்ளை - மர்ம நபர்களுக்‍கு போலீசார் வலைவீச்சு

x

புதுச்சேரியில், மதுபான கடையின் நிர்வாக அலுவலகத்தை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தனியார் மதுபான கடையின் நிர்வாக அலுவலகத்தின் பூட்டை உடைத்து, 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம், லேப்டாப், மற்றும் இருசக்கர வாகனம் திருடு போயுள்ளது.

இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்கள் இருவரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்