பிரபல நகைக்கடை உரிமையாளரை கூலிப்படையை ஏவி கொன்ற போலீஸ் - மதுரையில் பயங்கரம்.. பகீர் பின்னணி

x

மதுரையில் காவலரே கூலிப்படையை ஏவி நகைக்கடை உரிமையாளரை கொலை செய்த வழக்கில், 8 பேர் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் மணிகண்டனுக்கும், ஹரிஹரபாபு என்னும் காவலரின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் மணிகண்டனுக்கும், ஹரிஹரபாபுவுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கலிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக ஹரிஹரபாபு, கூலிப்படையை ஏவி மணிகண்டனை கொலை செய்தார். இதனையடுத்து ஹரிஹரபாபுவும், 8 கூலிப்படையினரும் கைது செய்யப்பட்ட நிலையில், கைதான கூலிப்படையினர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்