"தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ காரணம் காவல்துறை" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

x

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட காவலர்களுக்கான கூடைப்பந்து மைதானத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் விளையாட்டுப்போட்டிகளை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின், ராஜரத்தினம் மைதானத்தில் 1 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள 24 விளையாட்டு வகைகளைச் சேர்ந்த உபகரண பொருட்களை காவலர்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார். பின்னர் மேடையில் பேசிய அவர், காவல்துறையினர் தங்களது மன உளைச்சலை போக்குவதற்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்