காஷ்மீரில் 172 தீவிரவாதிகளை வேட்டையாடிய போலீஸ்...

x

2022 பயங்கரவாதிகளை ஒழிப்பதில் வெற்றிகரமான ஆண்டாக இருந்ததாக மாநில ஏடிஜிபி விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், காஷ்மீரில் வேட்டையாடிய 172 பயங்கரவாதிகளில் 42 பேர் வெளிநாட்டு பயங்கரவாதிகள் என தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பயங்கரவாதிகளில் பெரும்பாலானோர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ஆவர்.

2022-ல் பயங்கரவாத இயக்கங்களில் புதிதாக சேர்பவர்கள், சேர்ந்த ஒரு மாதத்திலே வேட்டையாடப்பட்டதால் இளைஞர்கள் பயங்கரவாத இயக்கங்களில் சேர்வது 37 சதவீதம் குறைந்து உள்ளதாகவும் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்