5 மாநிலங்களில் போலீசாரின் அதிரடி... சிக்கிய சீனர்கள்

x

5 மாநிலங்களில் போலீசாரின் அதிரடி... சிக்கிய சீனர்கள்

சீன செயலி மூலம் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சீனர்கள் உட்பட 21 பேரை கைது செய்துள்ளதாக சத்தீஸ்கர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அண்மை காலமாக சீன செயலிகள் மூலம் லோன் வழங்குவதாக கூறி பணமோசடியும், ஆபாச படங்கள் பகிர்வதாக மிரட்டல்களும் வருவதாக புகார்கள் எழுந்தன.

இதனால், சீன செயலிகள் குறித்து டெல்லி, ராஜஸ்தான், பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் சைபை கிரைம் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் சீனர்கள் உட்பட 21 பேரை கைது செய்த போலீசார், 17 லட்சம் ரூபாய் பணம், 9 லேப்டாப் மற்றும் 41 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்