குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவில் இறந்து கிடந்த 'விஷ பாம்பு' - சாப்பிட்ட 100 குழந்தைகளின் நிலை..?

x

பீகாரில், குழந்தைகளுக்கு பரிமாறப்பட்ட உணவில் இறந்து போன பாம்பு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அராரியா மாவட்டம் ஃபோர்ப்ஸ்கஞ்ச் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் மதிய உணவாக தயாரிக்கப்பட்ட கிச்சடி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. அப்போது மாணவர் ஒருவருக்கு பரிமாறப்பட்ட உணவில் குட்டி பாம்பு இருந்துள்ளது. உடனடியாக மாணவர்களுக்கு உணவு பரிமாறுவது நிறுத்தப்பட்டது. உணவை சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு

உடல்நலக்கோளாறு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்