"கஷாயத்தில் விஷம்... பிரபல நடிகரை கொல்ல முயற்சி.." நெருங்கிய ஒருவரே செய்த துரோகம்..அடுத்தடுத்து கிளம்பும் அதிர்ச்சி

x

தன்னை விஷம் வைத்து கொல்ல சதி நடந்துள்ளதாக பிரபல வில்லன் நடிகர் ஜே.டி.சக்கரவர்த்தி பரபரப்பு புகாரை முன்வைத்துள்ளார்... நடந்தது என்ன?... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

திரையில் நம் ஹீரோக்களை வயலெண்ட்டாக வறுத்தெடுத்தவர் தான் புகழ்பெற்ற வில்லன் நடிகர் ஜே.டி.சக்கரவர்த்தி...

கரடு முரடான வில்லன்களையே பார்த்து பழகிய நமக்கு, கனிவாக கிரிமினல் வேலை செய்யும் இவர் கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்ததுடன், அதுவே அவரின் அடையாளமாகவும் மாறிப் போனது...

ஆனால் இவர் வெறும் வில்லன் நடிகர் மட்டுமல்ல...திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர், இயக்குநர் என பல முகங்களைக் கொண்டவர்... இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் என சகல மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்துள்ளார்...

தமிழில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் திலீபனாக வந்து கலக்கியவர் தான் ஜே.டி.சக்கரவர்த்தி...

கன்னத்தில் முத்தமிட்டால் (https://youtu.be/lgIuHe_XDMk)

சர் வம், கச்சேரி ஆரம்பம், சமர், அரிமா நம்பி, ஜீரோ, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, காரி என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் ஜே.டி.சக்கரவர்த்தி...

இப்படி திரையுலகில் கலக்கி வந்த இவர் சமீபத்தில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது...

ஆம், தன்னை யாரோ விஷம் வைத்துக் கொல்ல முயன்றதாக இவர் தெரிவித்துள்ளது ஜே.டி.சக்கரவர்த்திக்கே இந்த நிலைமையா என்றுதான் நம்மை நினைக்க வைக்கிறது...

சமீபத்தில் அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், தன்னை யாரோ விஷம் வைத்துக் கொல்ல சதி செய்ததாகவும், பல மாதங்களாகத் தான் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டதாகவும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்...

மது, புகை என எவ்வித கெட்ட பழக்குமும் இல்லாத தனக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்படக் காரணம் என்ன தான் புலம்பியதாக தெரிவித்த சக்கரவர்த்தி, இந்தியா, இலங்கை என பல இடங்களில் சிகிச்சை பெற்றும் விடை தெரியாமல் விழித்து வந்ததாகக் குறிப்பிட்டார்...

நாகார்ஜுனா என்ற மருத்துவர் தான் மூச்சுத் திணறல் ஏற்பட்டது ஏன் என கண்டுபிடித்ததாகத் தெரிவித்த ஜே.டி.சக்கரவர்த்தி, தனக்கு மிகவும் நெருங்கிய ஒருவர் பல மாதங்களாக கசாயம் கொடுப்பதாகக் கூறி அதில் விஷத்தைக் கலந்து கொடுத்து வந்ததாகவும் பகீர் கிளப்பியுள்ளார்...

சமீபத்தில் தான் ஜே.டி.சக்கரவர்த்தி மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி தொகுப்பாளினி விஷ்ணுப் பிரியாவை இணைத்து கிசுகிசுக்கள் வெளியாகின... இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், "எனக்கும் விஷ்ணுப் பிரியாவுக்கும் இடையிலான பந்தம், "ஒரு மாணவிக்கும் வழிகாட்டிக்கும் இடையில் இருப்பதைப் போன்றது மட்டுமே" என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்...

ஜே.டி.சக்கரவர்த்தி கடந்த 2016ல் நடிகை Anukriti Govind Sharmaவைத் திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது...

திருமணம், கொலை முயற்சி என அடுத்தடுத்து சர்ச்சைகளைக் கிளப்பி வரும் ஜே.டி.சக்கரவர்த்தி, தன்னைக் கொல்ல முயன்றது யார் என்ற தகவலை மட்டும் வெளியிடவில்லை.


Next Story

மேலும் செய்திகள்