"நேரம் வந்துவிட்டது" - பிரதமர் மோடி அதிரடி

x

ஒற்றுமை எனும் மந்திரமே இந்தியா மேன்மை அடைவதற்கான ஒரே வழி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி, கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற தேசிய மாணவர் படையான என்சிசி-யின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

இதில், என்சிசியின் வெற்றிகரமான 75 ஆவது ஆண்டை குறிக்கும் வகையில், சிறப்பு அஞ்சல் தலை மற்றும் 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவிற்கான நேரம் வந்துவிட்டது.

ஒட்டு மொத்த உலகமும் இந்தியாவை எதிர்நோக்கி இருப்பதாகவும், அதற்கு முக்கிய காரணம் இளைஞர்கள் தான் என பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், கடந்த 8 ஆண்டுகளில் காவல் மற்றும் துணை ராணுவப் படைகளில் பெண்கள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது என்றார்.

முன்னதாக, நிகழ்ச்சிக்கு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்