கடைகளை மூட சொல்லி மிரட்டும் PFI அமைப்பினர் - அச்சத்தில் வியாபாரிகள்... வெளியான பரபரப்பு வீடியோ

x

கேரளாவில் கடை அடைப்பு போராட்ட தினத்தில் கடையை திறந்த இளைஞரை பாப்புலர் ஃபிரண்ட் தொண்டர்கள் மிரட்டிய காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எஸ் டி பி ஐ கட்சி சார்பில் கேரளாவில் நேற்று போராட்டம் நடைபெற்றது.

ஆனால், பெரும்பாலான பகுதிகளில் கடைகள், அரசு மற்றும் தனியார் வாகனங்கள் வழக்கம் போல் ஓடின.

இதில் 50க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளை கல் வீசி தாக்கியதோடு பல பகுதிகளில் வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன.

இந்நிலையில்,கண்ணூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தளிப்பரம்பு பகுதியில் ஹர்ஷாத் என்ற இளைஞர் தனது கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் கடையை திறந்து தனது பணியை வழக்கம் போல் மேற்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பை சேர்ந்த இருவர், கடையை மூடுமாறு ஹர்ஷாதை மிரட்டியது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்