மம்மியை காதலியாக நினைத்து 30 ஆண்டுகள் வாழ்ந்த வினோத மனிதர் - இறுதியில் அது 'ஆண்' என தெரிந்ததால் அதிர்ச்சி

x
  • 800 ஆண்டுகள் பழமையான மம்மியை தோழி என கூறி, அதனுடன் 30 ஆண்டுகளாக ஒருவர் வாழ்ந்த விநோதம் பெருவில் அரங்கேறியுள்ளது.
  • பெரு நாட்டில் உணவு டெலிவரி செய்து வந்த ஜுலியோ சீசர், தன்னுடைய பையில் மம்மியை வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • அவரிடம் இருந்து மம்மியை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை செய்ததில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
  • அந்த மம்மியை 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டிற்கு தந்தை எடுத்து வந்ததாகவும், அதிலிருந்து மம்மியை தோழியாக நினைத்து அதனுடன் வசித்து வந்ததாகவும் ஜூலியோ சீசர் கூறியுள்ளார்.
  • மேலும், மம்மியை நண்பர்கள் பார்க்க வேண்டுமென ஆசைப்பட்டதால் அவர்களிடம் காட்டுவதற்காக பையில் வைத்து எடுத்து சென்றதாகவும் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.
  • இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட மம்மியை ஆய்வு செய்ததில், அது 800 ஆண்டுகள் பழமையானது என்றும், அது ஒரு ஆண் என்பதும் தெரிய வந்துள்ளது.
  • இதற்கிடையே, தோழியாக நினைத்து வாழ்ந்து வந்த மம்மி, ஆண் என தெரிந்ததும், ஜூலியோ சீசர் அதிர்ச்சியில் உறைந்தார்.

Next Story

மேலும் செய்திகள்