சென்னை கோயம்பேட்டில் இறந்து கிடந்த நபர்.. 2 திருநங்கைகள் செய்த பகீர் காரியம் - அதிர்ச்சி காரணம்

x

சென்னைகோயம்பேட்டில் முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தவர் கொலை செய்யப்பட்டது தற்போது அம்பலமாகி உள்ளது.

கோயம்பேடு பகுதியில் உள்ள காலி இடத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்த நிலையில் போலீசார் உடலை மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இறந்து போனவர் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்காவை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பது தெரிய வந்தது.

தனியார் பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்த ரவிச்சந்திரன், தாகவும் கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் அதே பகுதியில் தங்கி மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் ஆர்த்தி, சத்யா என்ற திருநங்கைகளை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், கோயம்பேடு பகுதியில் பாலியல் தொழில் செய்து வந்ததாகவும், ரவிச்சந்திரன் இடையூறாக இருந்ததாக கூறி கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து திருநங்கைகள் இரண்டு பேர் மற்றும் சம்பத்குமார் ஆகிய மூன்று பேரை கோயம்பேடு போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்