'100 சவரன் நகையை சுருட்டி விட்டு தலைமறைவான சேட்ஜி ' பெரம்பூர் - ராஜஸ்தான்' வலை வீசி தேடும் போலீஸ்

x

சென்னையில் 100 சவரன் நகைகளுடன் நகை அடகுக்கடை உரிமையாளர் தலைமறைவாகியுள்ளதாக பொதுமக்கள் போலீசில் புகாரளித்துள்ளனர்.

சென்னை பெரம்பூரில் நகை அடகுக்கடை நடத்தி வந்தவர் கோவிந்தராம்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர், தனது குடும்பத்துடன் பெரம்பூர் சோமசுந்தரம் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவரிடம் நகைகளை அடகு வைத்தவர்கள் நகையை மீட்க சென்ற போது, கடையை பூட்டி விட்டு ராஜஸ்தானுக்கு தப்பிச் சென்றதாக கூறி பொதுமக்கள் போலீசில் புகாரளித்துள்ளனர்.

இதில், 100 சவரன் நகைகளுடன் கோவிந்தராம் தலைமறைவானதாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்