"பெரம்பூர் நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டது தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல"... வெளியான பரபரப்பு தகவல்

x
  • பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள நகைக்கடையை துளையிட்டு, 9 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • ஆந்திரா விரைந்த தனிப்படை போலீசார், அங்கு விசாரணை நடத்திய நிலையில், தற்போது தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  • கொள்ளையில் ஈடுபட்டது தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
  • கொள்ளையர்கள் பயன்படுத்தியதாக சந்தேகப்படும் ஒரு செல்போன் எண்ணை வைத்து, தொழில்நுட்ப ரீதியாக கண்டுபிடிக்கும் பணியும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பெரம்பூர் நகைக்கடை கொள்ளையில் பயன்படுத்திய பாணியை, பல்வேறு கொள்ளை சம்பவங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், தொழில் நுட்ப ரீதியாக அவர்களை கண்காணித்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்