விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்.. பொதுக்கழிப்பிடத்திற்கு அழைத்த இளைஞர்கள் - அடுத்து நடந்த பகீர் சம்பவம்... பெரம்பலூரில் அதிர்ச்சி

x

பெரம்பலூரில் 14 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் இந்திரா நகரில் வசித்து வருபவர் கணேசன். இவரது 14 வயது மகனான ரோஹித் ராஜ் சாலையில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, மதுபோதையில் வந்த அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்ற இளைஞர், சிறுவனை அப்பகுதியில் உள்ள பொதுக்கழிப்படத்திற்கு அழைத்து சென்று மதுபாட்டிலால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் சீனிவாசனின் நண்பர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தலைமறைவாக உள்ள சீனிவாசனையும், அவரது நண்பரையும் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்