மின்சார கேபிளை திருட முயன்ற நபர்கள்... திடீரென தாக்கிய மின்சாரம் - அடுத்த நொடியே நடந்த விபரீதம்

x

சென்னை புளியந்தோப்பு டிம்ளர்ஸ் சாலையில் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலையின் ஓரம் ராட்சத பள்ளம் தோண்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த இடத்தில் இருந்து திடீரென பலத்த சத்தம் கேட்டதை அடுத்து, அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது, 2 பேர் சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளனனர். பின்னர் இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இருவரையும் மருத்துவர்கள் பரிசோதித்தபோது, ஒருவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. ஆபத்தான நிலையில் மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தியபோது, உயிரிழந்த நபர் செந்தில்குமார் என்பதும், மற்றொரு நபர் மணிகண்டன் எனவும் தெரியவந்தது. ராட்சத உயர் மின்னழுத்த கேபிளை, டெலிபோன் கேபிள் என நினைத்து அறுக்க முயற்சி செய்தபோது, விபத்து நேரிட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்