"மணிப்பூரில் அமைதி..." - ராகுல் காந்தி ட்விட்

x

'மணிப்பூரில் அமைதியை மீட்டெடுப்போம்' என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் எங்களை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள், நாங்கள் மணிப்பூருக்கு உதவி செய்வோம், அங்குள்ள பெண்கள், சிறுமிகளின் கண்ணீரைத் துடைப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். மணிப்பூர் மக்களிடம் அமைதி, அன்பை மீண்டும் கொண்டு வருவோம் என்றும், இந்தியாவின் சிந்தனையை மணிப்பூரில் மீண்டும் உருவாக்குவோம் என்றும் அந்தப் பதிவில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்