சாந்தனுக்கு மீண்டும் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்

x

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தனின் இலங்கை பாஸ்போர்ட் அவரிடம் திருப்பி வழங்கியது சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம்

தனது பாஸ்போர்ட் 1995ம் ஆண்டு காலாவதியாகி விட்டதாகவும், அதை புதுப்பிப்பதற்காக, திருப்பித் தரக் கோரி சாந்தன் மனுத்தாக்கல் செய்திருந்தார்

இதன்பின்னர் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு, திருச்சி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள சாந்தனை காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துவந்து ஆஜர்படுத்தினர்

சாந்தனின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை சரிபார்த்த நீதிபதி தங்க மாரியப்பன், நீதிமன்றத்துக்கு தேவைப்படும் பட்சத்தில் பாஸ்போர்ட்டை தாக்கல் செய்ய வேண்டுமென என உத்தரவிட்டு, பாஸ்போர்ட் திருப்பி கொடுத்தார்


Next Story

மேலும் செய்திகள்