மகனை கொன்று உயிர் இருக்கா என ஸ்டெதஸ்கோப்பில் சோதித்த பெற்றோர் - கதவை திறந்ததும் மிரளவிட்ட 4 கால்கள்

x


நாகர்கோவில் மணக்குடியை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் முரளிதரனுக்கும், தக்கலை அருகே சரல்விளையை சேர்ந்த சைலஜாவுக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். இவர்களுடைய ஒரே குழந்தையான 6 வயது ஜீவா மன நோயால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

பல மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காததால் மனமுடைந்த தம்பதிகள் விபரீத முடிவை எடுத்தனர். அதாவது நேற்று இரவு ஆசையாக வளர்த்த ஒரே மகனை ஆசை பட பாணியில் தலையை பாலித்தீன் கவர் மூலம் மூச்சு திணற வைத்து கொலை செய்துவிட்டு, மகன் இறந்துவிட்டாரா என்பதை ஸ்டெதஸ்கோப் மூலம் உறுதி செய்தனர்.

இதையடுத்து முரளிதரன் வீட்டு ஹாலிலும், சைலஜா இறந்த மகனின் அருகே மின்விசிறியிலும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

வழக்கமாக பால் கொண்டு வந்த சைலஜாவின் தந்தை கோபாலன் வீட்டை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது மருமகன் தூக்குப்போட்டு இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த தக்கலை போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்