2 சிறுமிகளை பெற்றோரே போலீசில் ஒப்படைத்ததால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு

x
  • காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம் அருகே அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது.
  • அங்கு 6 சிறுமிகள் இரவில் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • இந்த சம்பவத்தில் சிறுமிகளை போலீசார் தேடி வந்த நிலையில், சிலர் அவர்களின் வீட்டிற்கே சென்றது தெரியவந்துள்ளது. இதில், 2 சிறுமிகளை அவர்களின் பெற்றோரே போலீசில் ஒப்படைத்த நிலையில், இருவரை அவர்களின் வீட்டிற்கே சென்று போலீசார் மீட்டுள்ளனர்.
  • மேலும் காதலன் வீட்டில் தங்கியிருந்த 17 வயது சிறுமியையும் போலீசார் மீட்டனர். தப்பியோடிய 6 சிறுமிகளில் 5 பேரை மீட்ட நிலையில், மேலும் ஒரு சிறுமியை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்