ஊராட்சிமன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கு - கைதான இளைஞர்கள் தப்பி ஓட்டம் - தவறி விழுந்த இளைஞர்கள் கை, கால் முறிவு

x

தாம்பரம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரிடம் இருந்து தப்பியோடிய இளைஞர்கள் 4 பேர் தவறி விழுந்ததில் கை,கால் முறிவு ஏற்பட்டுள்ளது.

மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனை இளைஞர்கள் சிலர் அரிவாளால் வெட்டி கொலை செய்த விவகாரத்தில் சிலரை போலீசார் கைது செய்தனர். அப்போது கைதான இளைஞர்களில் 4 பேர் தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் துரத்தி சென்ற நிலையில், 4 பேரும் தவறி விழுந்ததில் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்களை மருத்துவனையில் அனுமதித்த போலீசார் மாவு கட்டு போட்டு அழைத்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்