சீறி பாய்ந்த சொகுசு கார்... அடித்து தூக்கி வீசப்பட்ட நபர்கள் - அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

x

பல்லடம் அருகே அடுத்தடுத்து விபத்துக்களை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, அதிவேகமாக சென்ற சொகுசு கார் ஒன்று, டூவீலர்களில் சென்ற தம்பதி மற்றும் மற்றொரு நபர் மீது இடித்து விட்டு நிற்காமல் சென்றது. தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. தகவலறிந்து சென்ற போலீசார், காயமடைந்த 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். கார் ஓட்டுநரை கைது செய்த போலீசார், அவர் மதுபோதையில் காரை இயக்கினாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்