பகிர் கிளப்பும் கள்ளச்சாராய மரணம்...பலி எண்ணிக்கை உயர்வதால் அச்சம் - பீகாரில் பரபரப்பு

x

பீகார் மாநிலம் சாப்ராவில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்த நிலையில், சிவானிலும் கள்ளச்சாரயம் குடித்து 4 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீகாரில் 2016-ல் இருந்து மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது. அங்கு சட்டவிரோதமாக விற்கப்படும் கள்ளச்சாராயத்தை குடித்து மக்கள் உயிரிழக்கும் துயர சம்பவம் தொடர் கதையாக இருந்து வருகிறது. இப்படி சரன் மாவட்டம் சாப்ராவில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் நிதிஷ்குமார்- பாஜக இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், மீண்டும் கள்ளச்சாராய சம்பவம் அங்கு அரங்கேறியுள்ளது. சிவான் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் உயிரிழந்து உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்ற அச்சமும் எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்