ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு

ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு
x

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு, "No Work No Pay" என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அகவிலைப்படி உயர்வு கோரி, தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடை ஊழியர்கள், வரும் 13ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ள உள்ளனர். இதனிடையே, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், அனைத்து இணை மண்டல பதிப்பாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஊழியர்களின் போராட்டம் நடைபெறும் நாட்களில், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கும் வண்ணம், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்கள், அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களுக்கு "No Work No Pay" என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்ய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,


Next Story

மேலும் செய்திகள்